Ticker

6/recent/ticker-posts

Ad Code

நிலத் தகராறில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம்; திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ கைது: கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு- 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்

நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில், தனது துப்பாக்கியால் சுட்ட திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மனை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளும் தோட்டாங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் திருப் போரூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக திமுகவைச் சேர்ந்த இதயவர்மன் உள்ளார். இவரது தந்தை லட்சுமிபதி, திமுகவின் முன்னாள் ஒன்றியக் குழு தலை வர். இவர்கள் குடும்பத்துடன் திருப் போரூர் அருகே செங்காடு கிரா மத்தில் வசித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை 

Post a Comment

0 Comments