Ticker

6/recent/ticker-posts

Ad Code

வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளிப்பு

தளர்வு இல்லா முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், ஆம்பூர் அடுத்த புதுமனை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலன்(27) தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே புறவழிச்சாலை வழியாக வந்தார்.

அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் முகிலன் ஓட்டிவந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால், மனமுடைந்த முகிலன் மண்ணெண்ணெய்யை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த முகிலன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments