Ticker

6/recent/ticker-posts

Ad Code

கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போதை பொருள் உட்கொண்டது பரிசோதனையில் அம்பலம்: விசாரணை நடத்த எடியூரப்பா உத்தரவு

பெங்களூருவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஹோட்டல் அதிபர்கள் விரேன் கண்ணா, முகமது அனூப், ராகுல் ஷெட்டி, பிரித்வி ஷெட்டி, முன்னாள் ஜனதா தள அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

மடிவாளா மகளிர் காப்பகத்தில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் காவல் ஆய்வாளர் அஞ்சுமாலா தலைமையிலான போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை ஒப்புக்கொண்டனர். இந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கன்னட திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகளின் குடும்பத்தினர், தொழிலதிபர்களின் வாரிசுகள் என 24 பேரின் பெயர்களை போலீஸாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments