Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஊரடங்கு விதிகளை மீறியதால் மாணவர்கள் உட்பட 10 இந்தியர்கள் சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தல்

சிங்கப்பூரில் 45,961 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் இறந்துள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் ஊரடங்கு கடந்த ஏப்ரல் 7-ம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 2-ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் கடந்த மே 5-ம் தேதி சிங்கப்பூரில் கிம்கீட் சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நவ்தீப் சிங், சஜன்தீப் சிங், அவினாஷ் கவுர் ஆகிய மாணவர்கள், ஒரு பெண் உட்பட 7 பேரை மது விருந்துக்காக அழைத்துள்ளனர். 10 இந்தியர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஒன்றாகக் கூடியுள்ளனர். இதையறிந்த போலீஸார் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments