Ticker

6/recent/ticker-posts

Ad Code

கேரளா தங்கக் கடத்தலில் கைதான ஸ்வப்னா, சந்தீப் நாயரிடம் 8 நாள் விசாரிக்க அனுமதி: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தூதரகத்துக்கு தூதரக பார்சல் வழியாக கடந்த 5-ம் தேதி வந்த ரூ.13 கோடி பெறுமானமுள்ள 30 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். என்ஐஏ-வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments