கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடைகள் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின. வீடுகளிலேயே மக்கள் முடங்கினர்.
தமிழகத்தில் சில தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் வரும் 31-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதத்தின்அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ஜூலை 2-வது ஞாயிறான நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்குஅமல்படுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை
0 Comments