Ticker

6/recent/ticker-posts

Ad Code

வருவாய் ஆய்வாளர் கரோனாவால் உயிரிழப்பு: ஆவடி மாநகராட்சி அலுவலகம் மூடல்

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சியின் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர்(51), சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவர், கடந்த 10-ம் தேதி மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

எனவே அவர் அன்று இரவு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments