சுமார் ஒன்றரை லட்சம் இறக்குமதி எந்திர துப்பாக்கிகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரக தாக்குதல் துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட உள்ளன.
எஞ்சிய படைகளுக்கு இந்திய - ரஷ்ய கூட்டுத்தயாரிப்பில் உருவாகும் ஏ.கே. 203 துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன. அண்மையில் 16,000 இலகு ரக எந்திர துப்பாக்கிகளுக்காக இஸ்ரேலிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments