தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவால் பலியானவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாாபாத் அரசு மருத்துவமனையில்இருந்து மருத்துவமனையின் மேற்பார்வை இல்லாமல் ஆட்டோ ரிக் ஷா மூலம் இறுதிசடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அது மட்டுமல்லாது கொரோனாவால் பலியானவர்களை கையாளுபவர்,ஆம்புலன்ஸ் வண்டி இல்லாமல் எடுத்து செல்லப்பட்டது..
இது குறித்து நிஜாமாபாத் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் நாகேஷ்வர் ராவ் கூறியதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுமதிக்க தக்க நபர் கடந்த ஜூன் மாதம் 27 ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இறந்தவரின் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறார். அவரது கோரிக்கையின் பேரில் அவரிடம் இறந்தவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஆம்புலன்சிற்காக காத்திருக்காமல் உடலை எடுத்து சென்றுள்ளார் என கூறினார்.
0 Comments